Tuesday, January 28, 2014

'' ஐ '' படத்தில் வில்லன் யார் தெரியுமா..?



சினிமாவை அதிகம் எட்டி பார்க்காத பிரபல நடிகரின் மகன் ஐ படத்தில் வில்லன்:-

விக்ரமை வைத்து ‘ஐ’ என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.  மிகுந்த பிரம்மாண்ட பொருட் செலவில் எடுத்து வரும் இந்த படத்தில் சுரேஷ் கோபி, உப்பன் படேல் மற்றும் சினிமவை வெகு காலம் எட்டி பார்க்காத நடிகர் திலகத்தின் முத்த மகனான ராம்குமார் இன்னொரு முக்கிய வில்லனாக வலம் வருகிறார்.

இவர்களில் மூவரில் ராம்குமார்க்கு நடிப்பு அனுபவம் அதிகம் இல்லாதவர். பலவருடங்களுக்கு முன்பு அறுவடை நாள் என்ற படத்தில் தான் இவருடைய முதல் அறிமுகம், அதற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அப்பாவுக்கு துணையாகவும் மற்றும் சிவாஜி புரோடக்க்ஷன்க்கு முக்கிய பொறுப்பாளர் பணியாற்றி வந்தார்.

ஷங்கர் அவர்கள் இது வரை காணாத ஒரு முகம் இந்த வில்லன் கதாபத்திரத்துக்கு வேண்டும் என யோசித்து வர சமிபத்தில் ராம்குமார் அவர்களை  ஒரு நிகழ்ச்சியில் பார்த்து இவர் கரெக்ட்டாக இருப்பர் என முடிவு செய்து இப்பொழுது நடித்தும் கொண்டு இருக்கிறார்.

சிவாஜி கணேசன் மகன் என்ற ஒரே காரணத்துக்காக புதுமுக நடிகர் போல் நடத்தாமல் இவருக்கு ஏக உபசரிப்பாம்.

0 comments:

Post a Comment