Tuesday, January 28, 2014

உலக நாயகன் கமல்ஹாசன் பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்..!



உலக நாயகன் பதம்ஸ்ரீ கமல்ஹாசன் இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதுகளில் ஒன்றான பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்த பங்களிப்புகளைச் செய்தவர்களைப் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவினை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இவ்வாண்டிற்கான பத்மபூசன் மற்றும் பத்ம விபூசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை பத்ம விருதுகளைப் பெறுவோர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் உயரிய விருதுகளில் இரண்டாவதாக மதிக்கப்படும் பதம் விபூசன் விருதினை உலக நாயகன் கமல்ஹாசன் பெறவுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 1990 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. பதம்ஸ்ரீ விருதுகள் இந்திய அரசின் உயரிய விருதுகளில் மூன்றாவது இடத்தையும், பத்ம விபூசன் விருதுகள் இரண்டாவது இடத்தையும், பாரத ரத்னா முதல் இடத்தையும் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment