Thursday, January 30, 2014

அனேகன்’ படத்தில் தனுஷ் நடிக்கும் நான்கு கெட்டப்புகள் - வெளியானது...



அனேகன்’ படத்தில் தனுஷ் நடிக்கும் நான்கு கெட்டப்புகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷ் மாறுபட்ட நான்கு வேடங்களில் நடிக்கிறார், அந்த நான்கு கதாபாத்திரங்கள் என்னென்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

சுருட்டை முடியுடன் நவநாகரீக இளைஞனாக ஒரு கதாபாத்திரம் என்றால், புரூசிலியை போன்று மற்றொரு கதாபாத்திரம், மூன்றாவது கதாபாத்திரம், ’குட்டி’யை போன்ற க்யூட் கெட்டப்.

காசிமேடு பின்னணியில் வரும் நான்காவது சர்ப்ரைஸ் கதாபாத்திரம் தான் இந்தப்படத்திற்கு ஹைலைட்டாம்.

ஆக மொத்தத்தில் மாறுபட்ட ஒரு படத்தை தர இருக்கிறார் கே.வி.ஆனந்த்.

‘டி டே’ படம் தமிழில் வெளியாவதா? ஸ்ருதி கடும் எதிர்ப்பு!.




இப்போதும் தெலுங்கில் முன்னணி நடிகை போட்டியில் இருக்கும் ஸ்ருதிஹாசன் ‘டி டே’ என்ற பாலிவுட் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப் திட்டமிட்டுள்ள நிலையில் .

தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், அது தன்னுடன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக ஸ்ருதி தெரிவித்துள்ளா.

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் ‘டி டே’. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது.

 இப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். தற்பொழுது இப்படத்தை தமிழில் ‘தாவூத்’ என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இதனை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

 தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ‘ரா’ அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதையில் பாலியல் தொழிலாளியாக சவாலான வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.

ஆனால் இப்படம் தமிழில் வெளியாவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், அது தன்னுடன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

 இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்கள் தயாரானவுடன் அது ஊடகங்களில் வெளியிடப்படும் என அவர் கூறினார்.

நயன்தாராவை நம்ம ஆளுன்னு சொல்லும் சிம்பு..அப்படினா ஹன்சிகா?



 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது. சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதம நடைபெற்று வந்தது.

நயன்தாரா தான் நாயகி என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிக்க, அன்று முதல் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எகிறியது.

சிம்பு - நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பு தளத்தில் இருவருமே நண்பர்களாகவே வலம் வந்து இருக்கிறார்கள். தங்களுக்குள் எதுவுமே நடக்காதது போல் இருவருமே நடந்து கொண்டதை படக்குழு ஆச்சர்யத்தோடு பார்த்தது.

சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு தான் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இது தான் படத்தோட கதை.

இப்படத்தில் நயன்தாராவை நாயகி ஆக்குவதற்கு முன்பு, 'கதவைத் திற காதல் வரட்டும்’ அல்லது 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’ தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து இருக்கிறார் பாண்டிராஜ். நயன்தாராவை நாயகி ஆனவுடன் தற்போது 'இது நம்ம ஆளு' வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நயன்தாராவைப் பார்க்கும் போது எல்லாம் 'இது நம்ம ஆளு சார்' என்று கூறிக்கொண்டே இருப்பாராம். அது தான் தலைப்பிற்கு காரணமாம்.

ஹன்சிகா அப்படினு ஒருத்தங்க இருக்காங்களா.....?

லவ் யூ பிரதர்"- விஜய்யின் இந்த பாசத்தால் நெகிழ்ந்த தனுஷ் .....



 சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் வென்ற தனுஷிற்கு, நடிகர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சிம்புவிற்கு தல என்றால், தனுஷிற்கு தளபதி என்ற பேச்சுகள் உறுதியாகி கொண்டே இருக்கிறது. ஜனவரி 4ம் தேதி விஜய், தனுஷ் இருவருமே சந்தித்து நீண்ட நேரம் பேசினார்கள்.

விஜய்யை சந்தித்து உரையாடித்தை தனுஷ் மிகுந்த சந்தோஷத்துடன்,"இளைய தளபதி விஜய்யை சந்தித்தேன். அவரோடு ஆடினேன், பாடினேன். நிறைய பேசினேன். லவ் யூ பிரதர்"என்று ட்விட்டர் தளத்தில் கூறினார். அதுமட்டுமன்றி விஜய்யோடு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற பிலிம் ஃபேர் விருதுகள் விழாவில், சிறந்த புதுமுக நடிகருக்கான விருது 'ராஞ்சனா' படத்திற்காக தனுஷிற்கு கிடைத்தது.

பிலிம் ஃபேர் வென்ற தனுஷிற்கு விஜய் தனது வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். மலர் கொத்து ஒன்றை அனுப்பி வைத்து, தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

விஜய்யின் இந்த பாசத்தைப் பார்த்து தனுஷ் மிகவும் நெகிழ்ந்து விட்டாராம்.

விண்வெளியில் பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டர் – இந்திய இன்ஜினியரின் கண்டுபிடிப்பு!



விண்வெளி வீரர்களுக்கு சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை அமெரிக்காவில் உள்ள இந்திய இன்ஜினியர் உருவாக்கியுள்ளார்.இந்த 3டி பிரின்டர் 30 ஆண்டு காலம் உழைக்கும் திறன் படைத்தது.

 விண்வெளியில் நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் போதும், இந்த இயந்திரம் உணவு தேவையை ஈடுகட்ட மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு பலவிதமான பாக்கெட் உணவுகள் மற்றும் டின் உணவுகள், குளிர் பானங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இருந்தாலும் அவைகள் சரிவிகித ஊட்டச்சத்து உணவாக அமைவதில்லை. மேலும், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி நீண்ட கால ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவுப் பொருட் களை விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது.

விண்வெளியிலேயே உணவு தயாரிக்கும் நவீன இயந்திரத்தை உருவாக்க அமெரிக்காவின் நாசா மையம் விரும்பியது.

இதற்காக நாசா விடுத்த டெண்டரை, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள இந்திய மெக்கானிக்கல் இன்ஜினியர் அஞ்சன் என்பவர் நடந்தும் ‘சிஸ்டம்ஸ் அண்ட் மெட்ரியல்ஸ் ரிசர்ச் கார்பரேஷன்’ (எஸ்.எம்.ஆர்.சி) என்ற நிறுவனம் ஸி78 லட்சத்துக்கு கடந்த ஆண்டு பெற்றது.

விண்வெளியில் சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை, அஞ்சன் உருவாக்கியுள்ளார்.

இங்க் ஜெட் கலர் பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்கள் போல இந்த 3டி பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்களில் மைதா மாவு, தக்காளி பவுடர், சமையல் எண்ணெய், தண்ணீர், புரோட்டீன், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ், ஸ்டார்ச், மசாலா மற்றும் நறுமண பவுடர்கள் இருக்கும்.

பட்டனை கிளிக் செய்தால் போதும், 3டி பிரின்டர் முதலில் மாவை தண்ணீரில் கலக்கி, கீழே பொருத்தப்பட்டுள்ள சூடான தகட்டில் ஸ்பிரே செய்யும்.

அது வெந்து கொண்டிருக்கும்போதே, தக்காளி பவுடர், எண்ணெய், ஸ்டார்ச், புரோட்டீன், மசாலா என ஒவ்வொரு பொருட்களையும் 3டி பிரின்டர் அடுக்கடுக்காக ஸ்பிரே செய்யும். 70 வினாடிகளில் சூடான பீட்சா தயாராகிவிடுமாக்கும் .

வீடியோ லிங்க்:http://www.youtube.com/watch?v=uphIwHFz0no