மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த பெனடிக்ட், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், ஜமைக்கா நாட்டில் நடந்த தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, இந்திய தேசிய கொடி வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டினார். இது அவமதிப்பு செயலாகும்.
இதற்கிடையில், பிரதமரின் பரிந்துரையின்பேரில் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய கொடியை அவமதித்த சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்தது தவறு. அவரது பதவியை ரத்து செய்யவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இம்மனுவை நீதிபதி சுதாகர், வேலுமணி விசாரித்தனர். மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, மாநிலங்களவை துணை தலைவர் மற்றும் டெண்டுல்கருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 comments:
Post a Comment