Wednesday, January 29, 2014

பிந்துமாதவி, சுனேனா சம்பளத்தை கேட்டு இயக்குனர் ஓட்டம்..!



பிந்துமாதவியும், சுனேனாவும் இப்போது எக்குத்தப்பாக சம்பளம் கேட்கிறார்களாம். அவர்களின் சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். விஜய் நடித்த சுறா, பிரபு நடித்த பொன்மனம், என் உயிர் நீதானே போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.பி.ராஜ்குமார். தற்போது பட்டைய கௌப்பணும் பாண்டியா என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆணிமுத்து தயாரிக்கிறார்.

 இதில், விதார்த், சூரி, இமான் அண்ணாச்சி, மனிஷா நடிக்கின்றனர். இதன் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படம்பற்றி எஸ்.பி. ராஜ்குமார் கூறியதாவது: மினி பஸ்சில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டராக விதார்த், சூரி நடிக்கின்றனர். ஹீரோயினாக மனிஷா நடிக்கிறார். பொதுவாக, ஹீரோ, ஹீரோயின்கள் பெரும்பாலான காட்சிகளில் தாங்கள்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

தேவை இல்லாத காட்சிகளில்கூட தலைகாட்டுவார்கள். விதார்த்தை பொறுத்தவரை அந்த பிரச்னை இல்லை. ஒரு காமெடி காட்சியில் சூரி நடிக்க வேண்டியிருந்தது. அப்போது விதார்த்தும் அருகில் இருந்தார். அவரை பிரேமுக்குள் நிற்க வேண்டாம் என்றேன். உடனே ஓரமாகபோய் நின்று விட்டார். இப்படத்துக்கு ஹீரோயினை தேடுவதற்குள் பெரும்பாடாகி விட்டது.

காரணம், சில நடிகைகள் கேட்ட சம்பளம், எனக்கு ஷாக் கொடுத்தது. சுனேனா, பிந்துமாதவி இவர்களில் யாரையாவது ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று கால்ஷீட் கேட்கச் சென்றேன். ஆனால், அவர்கள் சொன்ன சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிவந்து விட்டேன். ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த மனிஷாவை கேட்டபோது, நான் கொடுக்க நினைத்த சம்பளத்தைவிட குறைவாக பெற்றுக் கொண்டார்.

நடிகைகளுக்கு சம்பளத்தை அதிக அளவில் கொடுத்து விட்டு, பிறகு ஷூட்டிங் நடத்துவது எப்படி என்று தெரியவில்லை. இவ்வாறு இயக்குனர் ராஜ்குமார் கூறினார். -

0 comments:

Post a Comment