வரும் பிப்ரவரி 3ம் தேதி முதல் பான் கார்டு விண்ணப்பித்தலை நெறிமுறைபடுத்துகிறது வருமானவரித்துறை...
இனி பான்கார்டு விணணப்பிக்க விரும்பும் நபர் தன்னுடைய
1.அடையாள அட்டை
, 2.இருப்பிடச் சான்று,
3.பிறந்த தேதியை உறுதி செய்யும் ஆவணம்
ஆகியவற்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும்,பான் கார்டு விண்ணப்பிக்கும் மையங்களில் உங்கள் அசல் ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது நகலோடு இணைத்து சமர்பிக்க வேண்டும்.சரிபார்த்தலுக்கு பிறகு விண்ணப்பிக்கும் நபரிடம் அசல் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
புதிதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு:
1.தனியார் அல்லது ஏஜென்ட் மூலம் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது அசல் ஆவணங்கள் தொலைய வாய்ப்புள்ளதால் கூடிய வரையில் நீங்கள் நேரடியாக பான் கார்டு விண்னப்பிக்கும் மையங்களில் விண்ணப்பிப்பது நல்லது.
2.நீங்கள் விண்ணப்பிக்க அளிக்கும் அசல் ஆவணங்களை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால் சற்று கவனமாக செயல்படுவது அவசியம்.
3.நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் போது சேவை வரி ஏதுமின்றி விண்னப்பிக்கலாம்..
0 comments:
Post a Comment