Tuesday, January 28, 2014

உலகளாவிய எம்.பி.ஏ., படிப்பு - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

உலகளாவிய எம்.பி.ஏ., படிப்பு:-



ஒப்பீட்டளவில், இந்தப் படிப்பு செலவு மிகுந்தது. ஏற்கனவே, நடுத்தர மற்றும் சீனியர் நிலையில், ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு இப்படிப்பு மிகவும் ஏற்றது.

இந்தப் படிப்பை, இந்தியாவில், ஒரு சில கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. இந்தியாவின் ஐ.ஐ.எம்., பெங்களூர் மற்றும் பிரிட்டன், கனடா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைச் சேர்ந்த தலா 1 பிரபல வணிகப் பள்ளிகள் இணைந்த கூட்டு முயற்சியின் மூலம், மேலாண்மை கல்வியில், International Masters Programme  in Practicing Management(IMPM) என்ற படிப்பு வழங்கப்படுகிறது.

இப்படிப்பை மேற்கொள்ள, ஒரு நபருக்கு 60,000 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. இந்தத் தொகையில், பயணம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் உள்ளடங்காது. மாறாக, கல்வி மற்றும் Inter-modular support போன்றவை அடங்கும்.

பெங்களூரிலுள்ள கிறைஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகம் என்ற இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து, MBA-MS என்ற படிப்பை வழங்குகின்றன. இப்படிப்பிற்கு 14 முதல் 15 லட்சங்கள் செலவாகும்.

Krannert School of management of Purdue university, Universidad Puebla, Mexico, Tianjin University, China ஆகிய சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, ஐ.ஐ.எம்., உதய்ப்பூர், குளோபல் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் என்ற ஸ்பெஷலைசேஷனில் 15 மாத dual degree executive MBA படிப்பை வழங்குகிறது. அமெரிக்காவில் படிக்கும் காலத்திற்கான கட்டணம் 20 ஆயிரம் டாலராகவும், இந்தியாவில் படிக்கும் காலத்திற்கான கட்டணம் ரூ.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கேஸ் வெஸ்டர்ன் பல்கலையின், வெதர்ஹெட் மேலாண்மை கல்வி நிறுவனம், ஷாங்காயின் டோங்ஜி பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து, குளோபல் எம்.பி.ஏ., படிப்பை XLRI வழங்குகிறது. இந்த 3 நாடுகளின் 60 மாணவர்களும், தங்களின் முதல் பருவ படிப்பை டோங்ஜி பல்கலையிலும், இரண்டாம் பருவ படிப்பை XLRI கல்வி நிறுவனத்திலும், மூன்றாம் பருவ படிப்பை கேஸ் வெஸ்டர்ன் கல்வி நிறுவனத்திலும் மேற்கொள்வார்கள்.

அதேசமயம், நான்காம் பருவ படிப்பை, உள்ளூர் பட்டப்படிப்பு ரீதியான செயல்பாட்டுத் தேவைகளுக்காக, இந்த 60 மாணவர்களும், அவரவர் சொந்த நாடுகளுக்கே சென்று, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் மேற்கொள்வார்கள்.

இந்த 2 வருட படிப்பிற்கு மொத்தம் ரூ.25 லட்சம் செலவாகிறது. சமுதாயத்திற்கு நீடித்த பொருளாதார வளர்ச்சியை தரக்கூடிய உலகளாவிய தலைவர்களை இந்தப் படிப்பு உருவாக்கும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா தயாரிப்பில் தீவிரம் காட்டும் சூர்யா..!



 சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்களுக்கு நல்ல காலம் பிறந்திருப்பதாக துணை இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

'சிங்கம் 2' படத்தின் மூலம் படத்தயாரிப்பிலும் ஈடுபட தீர்மானித்தார் சூர்யா. தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது குழந்தைகளின் பெயரான தியா, தேவ் ஆகியோரது முதல் எழுத்தை வைத்து 2D எண்டர்டெயின்மென்ட் என்று ஆரம்பித்தார்.

அப்படத்தினைத் தொடர்ந்து சூர்யா தயாரிக்கவிருக்கும் படங்கள் பற்றிய செய்தியோ, என்ன மாதிரியான கதைகளைக் கேட்கிறார் என்பது பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்று வந்த இணை இயக்குநர் ஒருவரைச் சந்தித்த போது, பெயர் வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நம்மிடையே பேசினார். "சூர்யாவின் தயாரிப்பு அலுவலகத்திற்கு யார் சென்றாலும் உடனடியாக ஒரு படிவத்தினைக் கொடுத்து நிரப்பச் சொல்லுவார்கள். அப்படிவத்தில் பெயர் மற்றும் கைபேசி எண், படிப்பு, ஊடகத் துறைக்கு வரும் முன்பு செய்த வேலை, பொழுதுபோக்கு, ஊடகத் துறையில் அனுபவம், கதை வகை, கதைச்சுருக்கம், இக்கதையின் தனித் தன்மை என்ன? ஏன் இது படம் ஆக்கப்பட வேண்டும்? ஆகிய கேள்விகள் இருக்கும்.

அப்படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இதே போல நிறைய பேர் கொடுத்திருக்கிறோம். படத்தின் பட்ஜெட் 2 கோடிக்கு மிகாமல் இருப்பது போல தான் கதைகளைக் கேட்கிறார்கள். எனது கதையும் அதற்குள் தான் திட்டமிட்டிருக்கிறேன். கண்டிப்பாக எனது கதை சூர்யாவிக்கு பிடிக்கும். எனக்கு கண்டிப்பாக வாய்ப்பிருக்கு" என்று சந்தோஷம் பொங்க பேசினார்.

ஆகவே, இயக்குநராக வேண்டும் என்று கதை எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் கதவு திறந்திருக்கிறது. விரைவில் சூர்யா தயாரிக்கும் படத்தின் இயக்குநர் நீங்களாகவும் இருக்கலாம்.

பேஸ்புக் அக்கௌன்ட்டை தற்காலிகமாக செயலிழக்க(Deactivate) வைப்பது எப்படி..?




பேஸ்புக் மிகப்பிரபலமான சமூக இணையதளம். இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது பேஸ்புக்காக தான் இருக்கும்.

 ஒரு சில நேரத்தில் உங்களுடைய பேஸ்புக் கணக்கை செயலிழக்க செய்ய நீங்கள் நினைக்கலாம் இதற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளது முக்கியமாக உங்கள் கணக்கை யாராவது ஹாக் செய்தாலோ, இந்த தளதினால் நேரம் வீணாக செலவாகிறது என நினைக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட அக்கௌன்ட் வைத்திருப்பதால் ஒன்றை செயலிழக்க வைக்க நினைக்கலாம் இப்படி பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

 ஆதலால் இப்பதிவில் பேஸ்புக் கணக்கை எப்படி செயலிழக்க வைப்பது என பார்ப்போம்.

முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

 பிறகு Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.

Account Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Security என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

ecurity லிங்கை கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் கீழே இருக்கும் Deactivate your account என்ற ஒரு லிங்க் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில ஆப்ஷன்கள் காட்டும் அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.

Email opt out என்ற இடத்தில் டிக் மார்க் கொடுக்கவும்(டிக் பண்ணாமல் விட்டால் பேஸ்புக்கில் இருந்து Invitations,Notifications ஈமெயில்கள் வந்து கொண்டே இருக்கும்)

அவ்வளவு தான் உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது ஓபன் செய்தால் கீழே கண்ட செய்தி தான் வரும்.

இந்த கணக்கு தற்காலிகமாக தான் பேஸ்புக் தலத்தில் இருந்து நீக்கப்படும் ஆதலால் இந்த கணக்கை நீங்கள் எப்பொழுது நினைத்தாலும் மீண்டும் செயல் படுத்தி கொள்ளலாம். எப்பொழுதும் போல இந்த கணக்கின் ID, PASSWORD கொடுத்து நுழைந்தால் தானாகவே Reactivate ஆகிவிடும்.

Employment – ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?



தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்

பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு : உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : RPD2013M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD – என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )

பதிவு செய்த ஆண்டு : 2013

 ஆண் / பெண் : M

 பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.