Wednesday, January 29, 2014

கைப்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்க வேண்டுமா..?

கைப்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்க வேண்டுமா..?

கைப்பேசிகளில் உண்டாகும் வைரஸ் தாக்கங்களால் அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அழிந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன இதனால் ஏற்படும் தரவு இழப்பினை தவிர்ப்பதற்கு பேக்கப் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனையும் தாண்டி அழிவடைந்த தரவுகளை மீட்டுக்கொள்வதற்கு phoneMine எனும் மென்பொருள் உதவியாக காணப்படுகின்றது. இதன் மூலம் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றினையும் அழிந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றினையும் மீட்கக்கூடியதாக இருக்கின்றது.

தரவிறக்கச் சுட்டி:-

hotdownloads2.com/trialware/download/Download_Amrak.PhoneMiner.Setup.v.2.3.2.msi?item=34333-4&affiliate=49466

பவர் கட்டில் இருந்து இந்தியா விடுதலை பெறும் நேரம் விட்டது..!



ஐஐடி மெட்ராஸ் ஒரு புது வகையான மின்சார பிராஜக்ட்டை இவ்வளவு நாள் சைலென்டாய் செய்து இப்போது அதை செயல்படுத்த உள்ளது. அதாவது மெல்லிய அழுத்தம் கொண்ட டிசி லைன்களை உங்கள் வீட்டிற்குக்கு கனெக்ஷன் தர போகிறது மின்சார வாரியம்.

 இது ஆங்காங்கே இருக்கும் சப்ஷ்டேஷன் மூலம் இதனை உங்கள் வீட்டின் எக்ஸ்ஸிட்டிங் லைன்களின் கூட அல்லது புதிதாகவும் கொடுக்க உள்ளது. இதன் மூலம் 3-5 லைட்கள், இரண்டு மின் விசிறி மற்றூம் ஒரு சார்ஜர் பாயின்ட் வேலை செய்யும். இதையொட்டி பெரும் மின்சார பிரச்சினையின் போது மின்சார லைன்களை ஷ்ட் டவுன் செய்வார்கள் ஆனால் இந்த டிசி லைன்களை பதிந்துவிட்டால் ஷட் டவுன் இல்லவே இல்லை.

அத்துடன் பழுதை 100 வாட் டிசி லைனில் அப்படியே பார்க்க முடியும். அப்படியே 220 வோல்ட் ஏசி லைன் ஷட்டவுன் செய்தால் கூட இந்த டிசி லைன்கள் அந்த வீட்டில் வேலை செய்யும். அதன் மூலம் அத்தியாவாசிய தேவையான சில விளக்குகள் / மின்விசிறி மற்றும் மொபைல் சார்ஜர் பாயின்ட் வேலை செய்யும். இதனை இன்ஸ்டால் செய்ய வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே.

மிக விரைவில் தமிழ் நாடு / ஆந்திரா / கேரளா மற்றூம் கர்னாடாகா மின்சார நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஆகி இந்த பிராஜக்ட் ஆரம்பிக்க படுகிறது. இதனை வடிவமைத்தவர் தமிழர் மின்சார பொறியாளர் பேராசிரியர் – பாஸ்கரன் ராம மூர்த்தியாகும். இதை இப்போது செயல்படுத்த அந்த அந்த ஏரியாவுக்கு அதிகாரிகள் விஜயம் செய்து விரும்பிய கஸ்டமர்களுக்கு உடனே பொருத்தியும் தருகின்றனர் என்பது கூடுதல் மகிழ்ச்சி தகவல்.

தமிழில் வெளியாகும் ஜாக்கிசானின் போலீஸ் ஸ்டோரி..!



ஜாக்கிசானின் அதிரடி ஆக்ஷனில் தயாராகி உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்துள்ள படம் போலீஸ் ஸ்டோரி. இதுவரை இப்படத்தின் ஆறு பாகங்கள் வந்துள்ளது. 6–வது பாகமாக உருவான ‘நியூ போலீஸ் ஸ்டோரி 2013’ படம் கடந்த டிசம்பரில் சீனாவில் ரிலீசாகி சக்கைபோடு போட்டது. அங்கு மட்டும் ரூ.400 கோடி வசூல் ஈட்டியது.

இப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து சுரபி பிலிம்ஸ் சார்பில் மோகன் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். போலீஸ் அதிகாரியான ஜாக்கிசான் மகன் உள்பட 33 பேரை தீவிரவாதிகள் கடத்தி பிணையகைதிகளாக அடைத்து வைக்கின்றனர்.

அங்கு ஜாக்கிசான் கைதிபோல் ஊடுருவி வில்லன்களை துவம்சம் செய்து 33 பேரையும் எப்படி மீட்கிறார் என்பது கதை. ஆக்ஷன் காட்சிகளை அதிக பொருட் செலவில் எடுத்துள்ளனர். ஜாக்கிசானுடன் ‘லியுயே’ ‘ஜிங்டியன்’ நடித்துள்ளனர். டிங்ஷெங் இயக்கியுள்ளார்.

சூப்பர் நிலவு வெள்ளிக் கிழமை தோன்றும்..! மிஸ் பன்னாதிங்க....



சூப்பர் நிலவு வெள்ளிக் கிழமை தோன்றும்! மிஸ் பன்னாதிங்க....


பூமி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிகழ்வால் வழக்கத்தை காட்டிலும் நிலவின் அளவு பெரிதாக காணப்படும்.

 இத்தைய நிகழ்ச்சிக்கு சூப்பர் நிலவு என பெயிரிட்டு அழைக்கப் படுகிறது.அத்தகைய நிகழ்வு இந்தாண்டு ஐந்து முறை நி்கழ்கிறது. இம் மாதம் முதல் தேதி நடந்து முடிந்துள்ளது.

அடுத்த நிகழ்வு வரும் வெள்ளி்க்கிழமை(31-ம் தேதி) நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 12, ஆகஸ்ட் 10,செப்டம்பர் மாதம் 9-ம்தேதி ஆகிய நாட்களில் நிகழ உள்ளது.

 வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி முதல் இதனை காணலாம் என விண்வெளி பவுண்டேஷனின் தலைவர் தேவ்கன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சூப்பர் நிலவு வரும் 2018-ம் ஆண்டு ஜனவரியில் தான் தோன்றும் எனவும் அவை தெரிவித்துள்ளது.

பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது.

அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது.

 அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்குமுன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் நிலவு என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது.

இந்த ஆண்டு இதுபோன்று ஐந்துமுறை இந்த மூன்று கோள்களும் ஒரே கோட்டில் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் நிகழ்வு இந்த மாதம் ஒன்றாம் தேதி ஏற்பட்டது. தற்போது வரும் வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது முறை சூப்பர் நிலவு தோன்றும் என்றும் மாலை 3.30 மணிக்கு இதனைக் காண முடியும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

 அந்த சமயத்தில் நிலவின் அளவு 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் சி.பி.தேவ்கன் குறிப்பிட்டுள்ளார்.